Sunday, 26 February 2017

உளுந்தப் பருப்பு சோறு

                                   உளுந்தப் பருப்பு சோறு


தேவையானவை

அரிசி                  : 500 கிராம்
உளுந்தம் பருப்பு         : 200 கிராம்
(உடைத்தது)அல்லது
கருப்பு உளுந்து
தேங்காய்              :  1 மூடி
பூண்டு                 20 பல்
வெந்தயம்            : 1 ஸ்பூன்
உப்பு                 : சிறிது

செய்முறை:

உளுந்தம் பருப்பை  வாணலியில் சிறிது வறுத்து எடுக்கவும்.
களைந்து வைத்த அரிசியும், வறுத்த உளுந்தம் பருப்பையும், 1 ஸ்பூன்
வெந்தயம், 20 பல் பூண்டு சேர்த்து 2 லிட்டெர் தண்ணீரில் குக்கரில்
பக்குவமாக வேக வைக்கவும். தேவையான உப்பு இடவும்.

தேங்காய் துருவி சாதத்தின் மேல் இடவும்

சுவையான, மிகவும் சத்துள்ள உணவு தயார். எல்லோரும், குறிப்பாக இளம்,
வயதான பெண்கள் விரும்பும் உணவு.

உளுந்தம் பருப்பு: தொலி உள்ளது அல்லது தொலி நீக்கியது,
அவரவர் விருப்பம்.

பொருத்தமான துணை உணவு:

1. அப்பளம், 2 வெங்காய வடகம்,  3. எல்லா விதமான சிப்ஸ்.

4. எள்ளு துவையல்:  (செய்முறை)

  எள்ளு  : 50  கிராம்
  சிறிய மூடி தேங்காய் , வர மிளகாய் 5, சிறிது புளி, உப்பு (தேவை)
  மிக்சியில் இட்டு, சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
  எள்ளு சட்னி தயார்.

5. கத்திரிக்காய் கொத்சு:

  கத்திரிக்காய்  - 250 கிராம், சின்ன வெங்காயம் - 100 கிராம்
  மிளகாய் -5, புளி - நெல்லி அளவு, உப்பு(தேவை) காயம் - சிறிது

  கத்திரிக்காய் 4 ஸ்பூன் எண்ணயில் வதக்கி  மசித்து சிறிது தண்ணீரில் வேக வைக்கவும்.   அதில் நறுக்கிய வெங்காயம், மிளகாய், புளி, உப்பு  போட்டு, பிறகு கடுகு, கறிவேப்பிலை   இட்டு தாளித்து இடவும்.
 

No comments:

Post a Comment