Sunday, 26 February 2017

கூட்டாஞ் சோறு

                    கூட்டாஞ் சோறு


தேவையானவை

அரிசி                 : 500 கிராம்
துவரம் பருப்பு          : 500 கிராம்
புளி                  : 20 கிராம்
காயம், மஞ்சள் தூள்,      (சிறிது அளவு)
உப்பு  
தேங்காய்              : சிறியது ஒன்று
நல்ல எண்ணை         : 100 கிராம்
காய்கறிகள்:

வழைக்காய்     -  ஒன்று
கத்திரிக்காய்     -  200 கிராம்
முருங்கக்காய்   -   இரண்டு
மாங்காய்       -   ஒன்று
உருளைக்கிழங்கு_  - 200 கிராம்
காரட்          -  200 கிராம்
அவரைக்காய்      -100  கிராம்
கொத்து அவரைக்காய்100 கிராம்
பீன்ஸ்            100  கிராம்
சின்ன வெங்காயம்   200 கிராம்

செய்முறை:

குக்கரில் அரை லிட்டர் தண்ணீரில் துவரம் பருப்பை,மஞ்சள் தூள், காயம் சேர்த்து
சிறிது நேரம் (பருப்பு கால் வாசி வெந்ததும்)வேக வைக்கவும். பின்பு அதில் களைந்து
வைத்த அரிசியை போட்டு 1 1/2 லிட்டர் சூடான வென்னீர் விடவும். அதில் நறுக்கி
வைத்த எல்லா காய்கறிகளையும் போடவும். 

பாதி மூடி தேங்காய் துருவி, அதில் ஒரு ஸ்பூன் சீரகம்,12 வரமிளகாய்,10 சின்ன வெங்காயம், 10 பூண்டு பல் சிறிது தண்ணீர் விட்டு மிக்சியில் அரைத்து அரிசி, பருப்பு காய்கறிகள் 3/4 வாசி வெந்தவுடன்போடவும். கரைத்த புளித்தண்ணீரை விடவும். உப்பு தேவையான அளவு போடவும்.

அரிசி, பருப்பு, காய்கறிகள் பக்குவமாக வெந்தவுடன் அதில் ,வானலியில் 100 கிராம் நல்ல எண்ணையில் கடுகு, கறி வேப்பிலை 20 சின்ன வெங்காயம் தாளித்து/வதக்கிப் கூட்டாஞ் சோறில் போடவும்.

இதுதான் மேல் நாட்டினர் விரும்பி சாப்பிடும் வெஜிடபில் ரைஸ். நாம் பல ஆண்டுகளுக்கு முன்பே கண்டு பிடித்தது.  பதினெட்டாம் பெருக்கு அன்று ஆறு இருக்கும் இடம் தேடி நம்மவர்கள் இந்த கூட்டாஞ் சோறை எடுத்து சென்று மிகவும் விரும்பி  உண்பார்கள்.

பொருத்தமான தொடு வகைகள்:

1. அப்பளம்,  2, வடகம்,   3.எல்லா விதமான சிப்ஸ்.

4. வெங்காய தயிர் பச்சடி:( செய்முறை)

3 பல்லாரி வெங்காயம்,  மூன்று பச்சை மிளகாய் எடுத்து பொடியாக வெட்டவும். அதை 200 கிராம்   தயிரில் போடவும். கொத்து மல்லி இலை நன்றாகக் கழுவி, வெட்டிப் போடவும். சிறிது உப்பு இடவும்.





No comments:

Post a Comment