Monday, 20 February 2017

தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்

             
           தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல் 

தேவையானவை

வெள்ளைப் பட்டாணி :     250 கிராம்
தேங்காய்                 அரை மூடி
மாங்காய்                 பாதி அளவு
காரட்                    1௦௦ கிராம்
பச்சை மிளகாய்           7 
கொத்து மல்லி இலை     :20 கிராம்
கடலை மாவு             2  ஸ்பூன்
இஞ்சி:                   சிறிது
கடுகு,
எண்ணெய் 
உப்பு                    தேவையான அளவு

செய்முறை:

முன்தினம் இரவு பட்டாணியை ஊற  வைக்கவும். மறுநாள் காலையில்
குக்கரில் நன்றாக வேக வைக்கவும் . தேங்காய், காரட் துருவவும் .
பச்சை .மிளகாய், மல்லி இலை சிறிதாக அரிந்து, மாங்காயைப் பொடியாக
நறுக்கவும் .  

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு  வெடித்தவுடன் , மாங்காய்,காரட்,
பச்சை மிளகாய் இட்டு நன்றாக வதக்கவும். பிறகு அவித்த பட்டாணியை இட்டு
தேவையான உப்பு இட்டு  கிண்டவும்.   கடலை மாவு இரண்டு ஸ்பூன் தூவ
வேண்டும் . பிறகு  துருவிய தேங்காய்,மல்லி இலை போடவும்.

இப்போது மிகவும் சுவையான  சுண்டல் ரெடி .

இந்த சுண்டலை சாதத்திற்கும் மற்றும்  பூரி, சப்பாத்திக்கும் தொட்டு சாப்பிட
நன்றாக இருக்கும். தனியாக மாலை டிபனாகவும் சாப்பிடலாம்

No comments:

Post a Comment