Monday, 20 February 2017

நேத்திரங்காய் சிப்ஸ்

                    நேத்திரங்காய் சிப்ஸ்

தேவையானவை:

நேத்திரங்காய்              : 5
உப்பு, எண்ணை            : தேவையான அளவு


செய்முறை:

நேத்திரங்காய் தோலை உறித்து எடுத்து, தண்ணீரில் 5 நிமிடங்கள்
ஊற வைக்கவும்.

உப்பை சிறிது தண்ணீரில் கரைத்து வைக்கவும்.

வாணலியில் எண்ணை காய்ந்ததும், நேத்திரங்காயை சிப்ஸ் அளவில்
சீவி எண்ணையில் போடவும். பாதி வெந்தவுடன் 2 ஸ்பூன் உப்புக்
கரைசலை வாணலியில் விடவும்.

சல சல என்று சத்தம் வந்தவுடன் சிப்ஸை கண் கரண்டி மூலம்
வெளியே எடுக்கவும்.

சுவையான சிப்ஸ் ரெடி. மலையாளிகள் உப்பேரி என்று சொல்லுவார்கள்.

குறிப்பு: எல்லோரும் எந்த நேரத்திலும்  விரும்பி சாப்பிடும் ஒரு ஸ்நாக்ஸ்.








No comments:

Post a Comment