Monday, 26 November 2018

திருநெல்வேலி அல்வா


              
                   திருநெல்வேலி அல்வா

தேவையானவை:

சம்பா கோதுமை       : 1/2 கிலோ
சர்க்கரை               : 1 ½ கிலோ
நெய்                   : 1  கிலோ
முந்திரிப்பருப்பு         : 100 கிராம் 

செய்முறை:

தரமான கோதுமையை சுத்தமான தண்ணீரில் நன்றாகக் கழுவி குறைந்தது 10 மணி நேரம் ஊற வைக்கவும். நல்ல தண்ணீர் விட்டு கோதுமையைப் பக்குவமாக அரைக்கவும். சிறிய கண் உள்ள சல்லடையில்    கோதுமைப் பாலை வடிகட்டவும். மூன்று முறை அரைத்துப் பால் எடுத்து வடி கட்டவும். கோதுமைப் பாலை சுமார் 10 மணி நேரம் மூடி வைக்கவும். தெளிவான நீரை சிறிது வடித்து எடுக்கவும். மீதி கோதுமைப் பாலை அகண்ட பாத்திரத்தில் விட்டு அடுப்பில் வைத்து சர்க்கரை சேர்த்து அரை மணி நேரம் ஓரளவு கட்டியாகும் வரை கிண்டவும். பாத்திரத்தின் மத்தியில் அல்வா திரண்டு வரும் போது சிறிது சிறிதாக நெய்யை விட்டு விடாமல் தொடர்ந்து கிண்டவும்** வறுத்த பாதி முந்திரிப் பருப்புகளைத் தூவவும். அல்வா பாத்திரத்தில் ஒட்டாமல் உருண்டு திரண்டு வரும். அல்வாவின் மேலே வரும் அதிகப்படியான நெய்யை வடித்து விடலாம். ஒரு மணி நேரம் ஆறியபின் திருநெல்வேலி (இருட்டுக்கடை) அல்வாவைப் பரிமாரலாம் எல்லோரும் ருசிக்கலாம்

** விரும்புபர்கள் அல்வா பவுடர் (கேசரிக்குப் பவுடர் இடுவது போல) சிறிது சேர்க்கலாம்.  

No comments:

Post a Comment